பெரியாம்பட்டியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பெரியாம்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
தருமபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உட்பட்ட காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தலை தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் M.Sc,Phd, இன்று திறந்து வைத்தார்.காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் T.அன்பழகன்,தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் PNCமகேஷ்குமார்,காரிமங்கலம் கிழக்கு துணை ஒன்றிய செயலாளர் சித்ரா வடிவேல் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். மேலும் நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story