கடத்தூரில் வெற்றிலை விற்பனை ஜோர்

கடத்தூர் வெற்றிலைச் சந்தையில் நேற்று ரூ.5.40 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வெற்றிலை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது நேற்று நடைபெற்ற சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி,சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலை வாங்க மற்றும் விற்பனைக்காக வந்திருந்தனர். ஒரு மூட்டை வெற்றிலை 14,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் கடந்த வாரத்தைக் காட்டிலும் 2000 ரூபாய் விலை அதிகரித்துள்ளது 22க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் சுமார் 5.40 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story