வெற்றிலை விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

வெற்றிலை விலை உயர்வு -  விவசாயிகள் மகிழ்ச்சி
வெற்றிலை விற்பனை 
கடத்தூர் வாரச்சந்தையில் கடந்த வாரத்தைக் காட்டிலும் வெற்றிலை விலை ரூ.4000 அளவிற்கு அதிகரித்ததால் விவாசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் வாரம்தோறும் வெற்றிலை சந்தை நடைபெறுவது வழக்கம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதி சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர்,மணியம்பாடி நல்லகுண்டலஹள்ளி ,கோம்பை, அஸ்தகியூர் ,முத்தனூர், கேத்திரெட்டிப்பட்டி ,அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இருபதுக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் 128 கட்டு கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலை 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது. இந்த வாரம் ஆரம்ப விலை 7000 முதல் அதிகபட்சமாக 16.000 ஆயிரத்துக்கு விற்பனையானது கடந்த வாரத்தை காட்டிலும் 4000 ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்து, வெற்றிலை முற்றிகள் விற்பனை நடைபெற்றது. ரூ.2.40 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story