கோவில் விழாவில் பரதநாட்டியம் அரங்கேற்றம்

நாமக்கல்லில் கோவில் ஆண்டு விழாவில் மாணவிகள் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தனர்.

நாமக்கல் -செம்பாளி வரதராஜப் பெருமாள் கோவில் ஆண்டு விழாவில் மாணவிகளின் பரத நாட்டியம் அரங்கேற்றம். நாமக்கல், இராமாபுரம்புதூர், செம்பாளி வரதராஜப் பெருமாள் கோவில் வருடா அபிஷேகத்தை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ நிருதய நடன நாட்டியாலயா குழுவினர் சார்பாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகள் பங்கேற்ற அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளான பொதுமக்கள் பரத நாட்டிய நிகழ்ச்சிளை ரசித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை செல்வராஜ், சின்னதுரை, முத்து, தனபால் ,TMT கருப்பண்ணன், ரவிக்குமார் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.ஆடல் கலையே தேவன் தந்தது தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது என்ற வரிகளுக்கு ஏற்ப குழந்தைகள் ஆடியது ரசிக்க வைத்தது.!பரதநாட்டியம் எனப்படும் தெய்வீகக்கலை போற்றுதலுக்குரியதாக உலகமெங்கும் வியாபித்துள்ளது.

Tags

Next Story