ஆத்தூர் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேட்டி

ஆத்தூர் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேட்டி

பாராதிராஜா பேட்டி

ஆத்தூரில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன் என தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்கள் சந்திப்பில் நான் அரசியல்வாதி அல்ல பொது மனிதனாக சொல்கிறேன் நாம் தமிழர் கட்சியினர் சீமான் வழியில் வெற்றி பெறுவார்கள். இளைஞர்கள் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.

நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன். எந்த சின்னம் கொடுத்தாலும் சீமான் வெற்றி பெறுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.சீமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என செய்தியாளர் கேள்விக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன் என தெரிவித்தார்.

Tags

Next Story