பாரதியாா் 142-ஆவது பிறந்தநாள் விழா

பாரதியாா் 142-ஆவது பிறந்தநாள் விழா

பாரதியாா் 142-ஆவது பிறந்தநாள் விழா

உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
மகாகவி பாரதியாரின் 142-ஆவது பிறந்த தினம், மூதறிஞா் ராஜாஜியின் 146-ஆவது பிறந்த தின விழா, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் தெற்குரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சிவாஜிகணேசன் மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். மாநகா் மன்றப் பொறுப்பாளா் சு.கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின் போது பாரதியாா், ராஜாஜி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

Tags

Next Story