பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு


ஈத்தாமொழியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.
கன்னியாகுமரி மாவட்ட மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் ஈத்தாமொழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈத்தாமொழி சந்திப்பில் நடந்த பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது:- நாட்டிற்கு இது மிக முக்கியமான தேர்தல். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வளர்ச்சிக்கான தேர்தல். கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் முழுவதுமாக தடைபட்டுள்ளது. தடைபட்டுள்ள அனைத்து வளர்ச்சி பணிகளையும் பயன்பாட்டில் கொண்டு வரவும், இந்த மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவித்து சுற்றுலா மாவட்ட பணிகள் மேற்கொள்ளவும், தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பா ஜ தலைவர் தர்மராஜ், எம் ஆர் காந்தி எம்எல்ஏ உட்பட கட்சியினர் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story