ராஜாக்கமங்கலத்தில் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

ராஜாக்கமங்கலத்தில் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்
ராஜாக்கமங்கலத்தில் பா ஜ ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கும், பேரூராட்சிகளாக மாற்றுவதையும் கண்டித்து ராஜாக்கமங்கலம் ஒன்றிய பா.ஜ.க சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இராஜாக்கமங்கலம் ஒருங்கிணைந்த ஒன்றிய தலைவர்கள் பொன் சுரேஷ் , ராஜேஷ் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர் காந்தி கண்டன உரையாற்றினார். ஊராட்சி தலைவர்கள் முத்து சரவணன், ஜெகதீஷ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story