லயோலா கல்லூரியில் பாரதியார் பிறந்தநாள் விழா

லயோலா கல்லூரியில் பாரதியார் பிறந்தநாள் விழா

 பாரதியார் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேட்டவலம் லயோலா கல்லூரியில் பாரதியார் பிறந்தநாள் விழாவில் பேச்சு போட்டி நடந்தது. வேட்டவலம் லயோலா கல்லூரியில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் பாரத மொழிகளின் திருவிழா 2023 மற்றும் பாரதி பிறந்தநாள் விழா பேச்சு போட்டி ஆகியவை நேற்று முன்தினம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.அதிபர் மரியநாதன் ஆசியுரைவழங்கினார். செயலர் இஞ்ஞாசி முன்னிலை வகித்தார். வீரமாமுனிவர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் பேராசிரியர் பிரபு வரவேற்றார்.

பேச்சு போட்டியில் கல்லூரியின் பல்வேறு துறை மாணவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.போட்டியின் நடுவர்களாக வேட்டவலம்,அண்டம்பள்ளம் அரசுபள்ளி தமிழ் ஆசிரியர்கள் பார்த்திபன், ஐவி,வேட்டவலம் தனியார்பள்ளி தமிழாசிரியர் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்தனர். விழாவில் துணை முதல்வர் கேத்தரின் லவ்ரா, தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஆரோக்கியதாஸ் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை மாணவர்கள் கோகுல், நிஷ்சோனா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தமிழ்துறை மாணவர் அருள் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags

Next Story