கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள்

கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள்

கல்வி மையத்தில் பாரதியார் பிறந்த நாள்

ஆசிரியர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் பாரதி யாரின் 141-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு வந்தவாசி ரோட்டரி சங்க நிர்வாகி எஸ்.வீரராகவன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சா.இரா.மணி முன்னிலை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார். பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் நெல்லியாங்குளம் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.மயில்வாகனன் பேசினார். கவிஞர்கள் எ.ராஜ்குமார், ம.சுரேஷ்பாபு, வி.வினோத் குமார், மொ.ஷாஜகான், தனசேகரன் ஆகியோர் பாரதியார் குறித்து கவிதை வாசித்தனர். பெ.பார்த்திபன் தலைமையிலான இசைக் குழுவினர் பாரதியார் பாடல்களை பாடினர். விழாவில் பூங்குயில் சிவக்குமார், பள்ளித் தலைமை ஆசிரியர் கள் க.வாசு, கோ. ஸ்ரீதர், இலவச சட்டப் பணிகள் குழு ஆலோசகர் எஸ்.விஜயகுமார், ஓய்வுபெற்ற செய்யாறு சர்க்கரை ஆலை அலுவலர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வி மைய ஆசிரியர் க.பூபாலன் நன்றி கூறினார்.

Tags

Next Story