பேராவூரணியில் பாரதியார் பிறந்தநாள் விழா

பேராவூரணியில் பாரதியார் பிறந்தநாள் விழா
பாரதி கலை இலக்கியப் பேரவை மரியாதை
மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாரின் சிலைக்கு, ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில், பாரதியாரின் விடுதலை உணர்வை உள்ளத்தில் ஏற்றுவோம், சாதி ஒழிந்த சமுதாயத்தை படைப்போம், பெண்ணுரிமையைப் போற்றுவோம், மொழி உணர்வு காப்போம் என்று முழக்கமிட்டனர். பாரதி கலை இலக்கியப் பேரவை தலைவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கே.வி.கிருஷ்ணன், செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் சு.போசு, ஆசிரியை இந்திரா தேவி, ஆசிரியர் வீர.சந்திரசேகரன், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் பொன். ராமமூர்த்தி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் கே.பி.சேகர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க பொறுப்பாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர் த.பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் மூர்த்தி, பாரதி வை.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story