பாரதியார் பிறந்த தினம் - துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மரியாதை

பாரதியார் பிறந்த தினம் - துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மரியாதை

மகாகவி பாரதியார் 

திருவண்ணாமலை பாரதியார் தமிழ் சங்கம் மற்றும் மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா தி.மலை அவல்கார தெருவிலுள்ள முருகையா நகராட்சி பெண்கள் பள்ளியில் தமிழ் செம்மல் பா.இந்திரராஜன் தலைமையில் நேற்று நடை பெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சீனி. கார்த்திகேயன், தமிழ் இயக்க மாவட்ட தலைவர் முனைவர் மாதவ. சின்ராசு ஆகியோர் முன்னிலை வைக்க பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பாரதியார் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் பாரதியாருடைய சிறப்புகளை விளக்கி விழா பேருரையாற்றினார். இந்த விழாவில் நகர மன்ற உறுப்பினர் திலகம் ராஜாமணி. ப.சித்ரா. ஆ.தே.முருகையன், அ வாசுதேவன்,சரவணன், திருக்குறள், சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் எழுதுகோலும் இனிப்பும் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பிரேமா நன்றி கூறினார்.

Tags

Next Story