புத்தகக்  கண்காட்சியில் பாரதி பிறந்த நாள்விழா

புத்தகக்  கண்காட்சியில் பாரதி பிறந்த நாள்விழா

குமாரபாளையம் புத்தகக் கண்காட்சியில் பாரதி பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் புத்தகக் கண்காட்சியில் பாரதி பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புத்தக கண்காட்சியில் பாரதி பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பாக பள்ளிபாளையம் பிரிவு சாலை சம்பூரணியம்மாள் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா விடியல் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இல்லம் தேடி கல்வி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் மகாகவி பாரதியார் வேடம் அணிந்து, நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே இருந்து, ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தனர். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் தவமணி பரிசுகளாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். கவுன்சிலர் அம்பிகா, சமூக சேகவி சித்ரா, பஞ்சாலை சண்முகம், தீனா, இல்லம் தேடி கல்வி தன்னார்வார்கள் ஜமுனா, சித்ரா ராணி, ராசாத்தி, உள்பட பலர் பங்கேற்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். டிச. 22 வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.


Tags

Next Story