தண்ணீர் தொட்டி கட்ட பூமி பூஜை :

தண்ணீர் தொட்டி கட்ட பூமி பூஜை :

மல்லசமுத்திரம் கொல்லப்பட்டியில் தண்ணீர் தொட்டிகட்ட பூமிபூஜை செய்யப்பட்டது.

மல்லசமுத்திரம் கொல்லப்பட்டியில் தண்ணீர் தொட்டிகட்ட பூமிபூஜை செய்யப்பட்டது.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, மாமுண்டி சாலையில் அமைந்துள்ள 9வதுவார்டு கொல்லப்பட்டியில் நேற்று, 2லட்சம் கொள்ளவில், ரூ.52லட்சத்து 41ஆயிரம் மதிப்பீட்டில் ராசிபுரம் காவிரி கூட்டு குடிநீர்திட்ட புதிய மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்டுவதற்காக தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் பூமி பூஜை செய்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் திருமலை அனைவரையும் வரவேற்று, முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் கூறுகையில், 29ஆயிரத்து161 மக்கள் தொகையின் அடிப்படையில் கட்டப்படும் இந்த தண்ணீர்தொட்டி வரும் அக்டோபர் மாதத்திற்குள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். திருச்செங்கோடு கோட்ட கிராமகுடிநீர்திட்ட உதவிபொறியாளர் பவித்ரா மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story