செஞ்சியில் அரசு மாணவிகள் விடுதி கட்டும் பணி பூமி பூஜை.

செஞ்சியில் அரசு மாணவிகள் விடுதி கட்டும் பணி பூமி பூஜை.

பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர்

செஞ்சியில் அரசு மாணவிகள் விடுதி கட்டும் பணி பூமி பூஜை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் ரூ.5 கோடியே 58 லட்சம் மதிப்பில் புதிதாக அரசு மாணவிகள் விடுதி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி அரசு ஆதிதிராவிடர் மாணவ விடுதி காப்பாளர் கவிதா வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து புதிய அரசு மாணவிகள் விடுதி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் அரங்க.ஏழுமலை, வல்லம் ஒன்றிய செயலாளர் இளம்வழுதி, நகர செயலாளர் கார்த்திக், துணை சேர் மன் ராஜலட்சுமி செயல்மணி, தாட்கோ செயற்பொறியாளர் நாகராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சங்கீதா சுந்தரமூர்த்தி, பொன்னம்பலம் மற்றும் நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story