ஆத்தூர் : நூலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை !

ஆத்தூரில் செயல்பட்டு வரும் நூலகத்தில் போதிய இட வசதி இல்லாததால் நூலகப் பின்பகுதியில் புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நகர மன்ற தலைவர் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட கிளை நூலகத்தில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் அரசு தேர்வுக்காக வந்து படித்து செல்லும் நிலையில் போதுமான இடவசதி இல்லாமல் இருந்த நிலையில் நூலக வாசகர்களின் கோரிக்கை ஏற்று நூலக பின் பகுதியில் புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா திமுக நகர செயலாளர் பாலசுப்ரமணியன் நூலக அலுவலர்கள் நூலக வாசகர்கள் பங்கேற்பு.

Tags

Next Story