கலையரங்கம் கட்டுவதற்கு பூமிபூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

கலையரங்கம் கட்டுவதற்கு பூமிபூஜை: எம்எல்ஏ பங்கேற்பு
கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை, மதுராந்தகம் எம்எல்ஏ பங்கேற்பு
கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜையில் மதுராந்தகம் எம்எல்ஏ பங்கேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி அகரம், சூறை, மேட்டுப்பாளையம் இப்பகுதிகளில் கலையரங்கம் கட்டித் தரக் கூறி சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 23. 10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜையை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன்,

மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வையாவூர் விஜி, குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர்.. இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story