நிழற்குடை அமைக்க பூமி பூஜை - எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி பங்கேற்பு

வீரணம்பட்டி சமத்துவபுரம் வளைவு அருகே பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையில் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வீரணம் பட்டி, சமத்துவபுரம் வளைவு அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. பூமி பூஜை முடிந்த பிறகு இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நட்டு பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் கடவூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story