அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை

அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
கருங்குழி பேரூராட்சி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் பங்கேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி, இரண்டாவது வார்டு பகுதியில்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி பேரூராட்சி மன்ற தலைவர் தாசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story