புதிய திட்டபணிகளுக்கான பூமி பூஜை

புதிய திட்டபணிகளுக்கான பூமி பூஜை

புதிய திட்ட பணிகள் துவக்கம்

எடப்பாடியில் நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலையம் மற்றும் 23 வார்டுகளுக்கு தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் சீரமைக்கும் பணிகளுக்கு 3 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டி வலசு, ஆவணியூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பூமி பூஜை நடைபெற்றது.தார் சாலைகள் அமைத்தல், சிமெண்ட் சாலைகள் புதுப்பித்தல் மற்றும் நகர்ப்புற ஆரம்ப துணைசுகாதார நிலையம் உள்ளிட்டவை அமைத்திட 15-வது நிதி குழு மானியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு நிதியின் மூலம் ரூபாய் 3 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் துவக்க விழாவில் பூஜை நடைபெற்றது.

Tags

Next Story