நெற்களத்திற்கான பூமி பூஜை!

நெற்களத்திற்கான பூமி பூஜை!

பூமி பூஜை

போளூர் அடுத்த கல்குப்பம் ஊராட்சியில் நெற்களத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கல்குப்பம் ஊராட்சி அரிமா நகர் காளியம்மன் கோயில் அருகில் ரூ.8, 80, 000 மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நெற்களத்திற்கான பூமி பூஜை போளூர் யூனியன் சேர்மன் சாந்தி பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர் நளினி சுதாகர், துணை தலைவர் சுரேஷ், குப்பம் துணை தலைவர் வீரமணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story