சமுதாயகூடம் கட்ட பூமி பூஜை

சமுதாயகூடம் கட்ட பூமி பூஜை

சமுதாயகூடம் கட்ட பூமி பூஜை

மாநிலங்களவை உறுப்பினர் ஜி கே வாசன் நிதியில் குருவராஜபாளையத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
அணைக்கட்டு தாலுகா நேமந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒண்டி குருவராஜபாளையம் கிராமத்தில் ஜி.கே.வாசன் மாநிலங்களவை உறுப்பினர் நிதி ரூ.15 லட்சத்தில் சமுதாயகூடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடந்தது. றப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட த.மா.கா. தலைவர் குப்புசாமி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் வேலூர் மாநகர் மாவட்ட த.மா.கா. தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி,வேலூர் மத்திய மாவட்ட த.மா.கா. தலைவர் அருணோதயம், நேமந்தபுரம் ஒன்றிய கவுன்சிலர் பார்த்தசாரதி, நேமந்தபுரம் ஊராட்சிமன்ற தலைவர் சவுந்தர்ராஜன், துணைத்தலைவர் சுமன், புத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் மோகன், விஜயகுமார், ஊர் நாட்டாமை யுவராஜ், பி.டி.எம்.சுரேஷ், ஏ.எஸ்.ராஜா, போர் ரமேஷ், முரளி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story