அரசு பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை

வாசவி கிளப் வனிதா இராசிபுரம் சார்பில் அரசு பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்டடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெள்ளைப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் சார்பாக 6 புதிய கழிவறைகள் கொண்ட ஒரு டாய்லெட் யூனிட் கட்டுவதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் ஜோன் ஜெபர்சன் ஸ்ரீ லட்சுமி ப்ரியா, முன்னாள் ஐபிசி ராஜசேகரன் , வனிதா ராசிபுரம் சங்கத் தலைவி டி.சந்தியா , செயலாளர் பூர்ணிமா, இயக்குநர்கள் லட்சுமி, காயத்ரி, சுபாஷிணி, ராஜேஸ்வரி பள்ளி தலைமை ஆசிரியை பேபி லதா , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் சேது ராமலிங்கம் , ஏ.ஆர்.துரைசாமி, துணைத்தலைவர் பாலு, சுப்ரமணியம், வெங்கடாசலம், ராஜா, வாசவி கிளப் நிர்வாகிகள் மணிகண்டன், தாரகராமன், ஸ்ரீ காந்தன், ஆசிரியைகள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாசவி கிளப் வனிதா இராசிபுரம் ஜோன் ஜெபர்சன் ஸ்ரீ லட்சுமி ப்ரியா, கூறும் போது அரசு பள்ளி மற்றும் பல்வேறு பணிகளுக்காக இந்த வனிதா கிளப் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறோம் அதன் அடிப்படையில் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் இது போன்ற பணிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம் என்றார். மேலும் இந்தப் பள்ளிக்கு புதிய கழிப்பறை கட்டடங்கள் விரைவில் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பணிகளை விரைந்து முடிக்க கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.

Tags

Next Story