புவனகிரி: தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு

புவனகிரி: தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு

புவனகிரி: தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு

புவனகிரி அருகே தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாண்பட்டினம் கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் முருகானந்தம் மனைவி ரஞ்சிதா இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ரஞ்சிதா கடந்த வாரம் கொண்ட சமுத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மாலை அவர் மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தூக்கில் ரஞ்சிதா பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக் டர் லட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தை சுந்தரமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறியிருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்கிற பிரிவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.

Tags

Next Story