சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை

நல்லாமூர் ஊராட்சியில் ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் மரகதம் குமரவேல் பங்கேற்பு.
நல்லாமூர் ஊராட்சியில் ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள நல்லாமூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான 15-வது நிதி குழு சுகாதார மையம் நிதியிலிருந்து ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டடப்பட உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் இவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். இந் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முதுகரை கார்த்திகேயன்மற்றும், அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story