பள்ளிபாளையம் அருகே தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை

பள்ளிபாளையம் அருகே தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை

சாலை அமைக்க பூமி பூஜை 

பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சின்ன வீதி மற்றும் குட்டை உள்ளிட்ட பகுதிகளில், நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ,தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 9 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4-சிப்பங்கள் 118 தார்சாலைகள் மற்றும் கான்கிரீட் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் தாமரை, திமுக நகர செயலாளர் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்....

Tags

Next Story