அரசு கட்டிடங்களுக்கான பூமி பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு

அரசு கட்டிடங்களுக்கான பூமி பூஜை - எம்எல்ஏ பங்கேற்பு
அரசு கட்டிடங்களுக்கான பூமி பூஜை, எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே நலதிட்ட பணிகளுகான பூமிபூஜையில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றார்.

மதுராந்தகம் அடுத்த பெரும்பேர்கண்டிகை, எடையாளம், களத்தூர், திம்மாபுரம் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரும்பேர்கண்டிகை பகுதியில் சிமெண்ட் சாலை எடையாலம் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம், களத்தூர் பகுதியில் கலையரங்கம், திம்மாபுரம் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களிடம் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் K.மரகதம் குமரவேல் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹ 38.20 இலட்சம் நிதி ஒதுக்கி பெரும்பேர்கண்டிகை பகுதியில் சிமெண்ட் சாலை எடையாலம் பகுதியில் அங்கன்வாடி மைய்ய கட்டிடம், களத்தூர் பகுதியில் கலையரங்கம், திம்மாபுரம் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

Tags

Next Story