திருச்செங்கோடு அருகே சாலை அமைக்க பூமி பூஜை

திருச்செங்கோடு அருகே சாலை அமைக்க பூமி பூஜை

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

திருச்செங்கோடு அருகே சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

திருச்செங்கோடு ஒன்றியம், ஒ. ராஜபாளையம் ஊராட்சி, கோழி கால நத்தம் சாலை முதல் கம்மன்காட்டு வரை ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.21,88,000 மதிப்பீட்டில் சாலையை பலப்படுத்துதல் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் மதுரா செந்தில் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் திரு.வட்டூர் தங்கவேல்,

ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு.தேவி ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் திருமிகு.மோகனா சசிக்குமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சசிகுமார் , சங்கர், கணேசன், நந்தகுமார், கிளை நிர்வாகிகள் அன்பு, ரத்தினம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story