வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

குமாரபாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. 

குமாரபாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சார்பில் 15வது மத்திய நிதி குழு மாநில திட்டத்தின் கீழ் 134 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதடைந்த 24 தார் சாலைகளை சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை (வார்டு எண் -25 சுள்ளிமடை தோட்டம்), குமாரபாளையம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள 78 தார் சாலைகளை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024-25ல் 429 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கு பூமி பூஜை (வார்டு எண் -10 நடராஜா நகர்), நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருவள்ளுவர் நகர் பகுதியில் நியாய விலை கட்டும் பணிக்கு பூமி பூஜை ஆகியன நடந்தன.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி சரவணன், விஜயா கந்தசாமி தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், நகரமன்ற கூட்டம் நடத்த முடியாது, நகராட்சியில் எந்த கட்டுமான பணியும் துவக்க முடியாது என்பதால், முன்கூட்டியே பல பணிகள் செய்திட இந்த பூமி நடைபெற்றது.

Tags

Next Story