புதிய வகுப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

புதிய வகுப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

புதிய வகுப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜையில் எம்எல்ஏ பங்கேற்றார்.

. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜெகதாபியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தில் , ரூபாய் 211.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 10 வகுப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று பள்ளி வளாகத்தில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி, ஜெகதாபி ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பூமி பூஜை முடித்த பிறகு, புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கலை நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

Tags

Next Story