ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் குட்டை அமைக்க பூமி பூஜை

கெங்கவல்லி பேரூராட்சியில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் குட்டை அமைக்க பூமி பூஜை நடந்தது.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சி உள்ள 2023 - 24 ம் ஆண்டு அம்ருத் 2.0 குட்டை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் குட்டை அமைக்க பேரூராட்சி மன்ற தலைவர் சு. லோகாம்பாள் பேரூர் செயலாளர் சு.பாலமுருகன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்வில் துணை தலைவர் மருதாம்பாள் நாகராஜ் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் லதா மணிவேல் கவுன்சிலர்கள் முருகேசன், அருண்குமார், தங்கபாண்டியன், சையது, ஹம்சவர்தினி குமார்,சத்யா செந்தில்,கவிதா சேகர்,கலியம்மாள், வகிதாபானு முஜிபுர் ரஹ்மான், ஆறுமுகம்,ஒப்பந்ததாரர்கள் பாலசுப்ரமணியம்,பிரகாஷ்,ஆனந்த்,பேரூர் நிர்வாகிகள் சிட்டிபாபு, இலக்குமணண், ராஜேந்திரன், சின்ராசு, சத்யராஜ்,ஜெகதீஷ் பாபு, செல்வ கிளிண்டன்,வெங்கடேஷ்,மணிகண்டன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story