பள்ளியில் மைதானம் அமைக்க பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

பள்ளியில் மைதானம் அமைக்க பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

கரூர் அருகே பள்ளியில் மைதானம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட , கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், எம் எல் ஏ சிவகாமசுந்தரி தலைமையில் MGNRGS திட்டத்தில் ரூபாய் 17.42 லட்சம் மதிப்பீட்டில் மைதானம் அமைப்பதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பாபு, தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பிரபு, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி வேலுச்சாமி, தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன்,

கோயம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா மயில்சாமி, பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story