தலைவாசல் பகுதியில் தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை

தலைவாசல் பகுதியில் தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை

பூமி பூஜை

சேலம் மாவட்டம், மணிவிழுந்தான் பகுதியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியம் மணிவிழுந்தான் ஊராட்சியில் மணிவிழுந்தான் தெற்கு கிராமத்தில் இருந்து மணிவிழுந்தான் தெற்கு புதூர் கிராமம் வரை ரூ.65 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை பூமிபூஜை செய்து தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மணிவிழுந்தா ஊராட்சி தலைவர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். தலைவாசல் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், ஊராட்சி துணை தலைவர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story