வடகீரனூரில் சிமென்ட் சாலை போட பூமி பூஜை

வடகீரனூரில் சிமென்ட் சாலை போட பூமி பூஜை

பூமி பூஜை 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடகீரனுாரில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிமென்ட் சாலை போடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் அபுபக்கர், ஊராட்சித் தலைவர் இதயதுல்லா, வார்டு உறுப்பினர் கூடுபாஷா, வேணுகோபால், காமராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story