கால்வாய் பணிக்கு பூமிபூஜை

கால்வாய் பணிக்கு பூமிபூஜை

பூமிபூஜை 

புங்கன்குளம் கால்வாய் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் ஆவுடையானூரில் பத்மநாதபேரி குளத்தின் மறுகால் மூலம் புங்கன்குளம் செல்லும் 5 கி.மீ. தொலைவுக்கான புங்கன்குளம் கால்வாய் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. ராமநதி - ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டத்தின் தொடா்ச்சியாக, இக்கால்வாய் பணிக்கு நடைபெற்ற பூமிபூஜையில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் முத்துமாணிக்கம், துறை உதவியாளா் பவுன்ராஜ், மதிமுக மாவட்டச் செயலா் உதயசூரியன், செல்லப்பா, மாடியனூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story