மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை !

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை !

பூமிபூஜை

கருக்கல்வாடி ஊராட்சியில்ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை அருள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட கருக்கல்வாடி ஊராட்சி மந்திவளவு கரட்டூர் பகுதியில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. சேலம் மேற்கு அருள் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

மேலும் அந்த பகுதியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு aசால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கே.ஆர்.தோப்பூர் பஸ் நிலையத்தில் இளம்பிள்ளை சாலையில் பஸ் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அருள் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று ரூ.10 லட்சம் மதிப்பில் அங்கு நிழற்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தாரமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் பச்சியண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவண கந்தன், கருக்கல்வாடி ஊராட்சி தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் தங்கராசு, இளைஞர் சங்க துணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய தலைவர் அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story