அரசுபள்ளி வகுப்பறை கட்ட பூமிபூஜை

அரசுபள்ளி வகுப்பறை கட்ட பூமிபூஜை

பூமிபூஜை

திருப்பூர் சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களுக்கு 1.80 கோடி மதிப்பில் பூமி பூஜை நடைபெற்றது.
செல்லம்மாள்காலனி அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் பூமி பூஜை! திருப்பூர் மாநகராட்சி 1&க்கு உட்பட்ட 24-வது வார்டு சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், தமிழக அரசின் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.80 கோடி மதிப்பில் தரைத்தளத்தில் 5 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 5 வகுப்பறைகளும் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.இதற்கு ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான நாகராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி சரவணக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story