பழனியில் தங்கும் விடுதி அமைக்க பூமிபூஜை

பழனியில் தங்கும் விடுதி அமைக்க பூமிபூஜை

தங்கும் விடுதி அமைக்க பூமிபூஜை


பழனியில் ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடத்திற்கான பூமிபூஜை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி இயங்கி வருகிறது.இங்கு பயிலும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கல்லூரியின் பின்புறம் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடம் மிகவும் பழமையானதாக இருப்பதால் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 7கோடியே 62லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தங்கும் விடுதி கட்ட திட்டமிடப்பட்டது.

Tags

Next Story