பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
எல்.எண்டத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே எல்.எண்டத்தூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் தம்பு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் எம்பி ஜி. செல்வம் கலந்து கொண்டு 180 மாணவ மாணவிகளுக்கு அரசு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மாலதி, தலைமை ஆசிரியை டெய்சி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story