பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மேலவளம்பேட்டை கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story