நரிக்குறவர் சிறுவர்களுக்கு சைக்கிள் போட்டி

நரிக்குறவர் சிறுவர்களுக்கு சைக்கிள் போட்டி

சைக்கிள் போட்டி

திருநெல்வேலியில் உள்ள பேட்டை நரிக்குறவர் காலனியில் குடியரசுதின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
75வது குடியரசு தினம் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்முறையாக பேட்டை நரிக்குறவர் காலனியில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.அதனை தொடர்ந்து நரிக்குறவர் சிறுவர்களுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்களுக்கு குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.

Tags

Next Story