மதுக்கூடங்கள் அமைக்க இ-டெண்டர் மூலம் நாளை ஏலம்

73 டாஸ்மாக் கடைகளுக்கு மதுக்கூடங்கள் அமைக்க இ-டெண்டர் மூலம் ஏலம் அக்டோபர். 27ம் தேதி நாளை நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்த்தில் செயல்படும் 32 டாஸ்மாக் மதுபான கடைகளில், 6 கடைகள் மதுக்கூடங்களுடன் இயங்கி வருகிறது. இதில் மதுக்கூடம் இல்லாத 26 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து மதுக்கூடங்களுக்கு இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.

அக்டோபர். 27ம் தேதி வெள்ளிக்கிழமை நாளை நடைபெறும் ஏலத்தில் மதியம் 2 மணிவரை ntenders.gov.in.nicgep/app என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பம் செய்யலாம். நாளை மாலை 4.30 மணியளவில் டெண்டர் திறக்கப்படும். என்று ஒருங்கிணைந்த பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story