தைல மர காட்டுப் பகுதியில் பெரும் தீ விபத்து

தைல மர காட்டுப் பகுதியில் திடீரென தீ விபத்து. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அருகே பெருமாநாடு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் தைலம் மர காடுகள் உள்ளன. இந்த பகுதியில் திடீரென காட்டுப் பகுதியில் மல மலவென எரிய தொடங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலுப்பூர் தீயணைப்பு துறையினர் அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story