பைக் மோதி விபத்து: மூதாட்டி படுகாயம்

பைக் மோதி விபத்து:  மூதாட்டி படுகாயம்

காவல் நிலையம்

கரூர் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்து டூவீலர் மோதி விபத்துக்குள்ளனதில் படுகாயம் அடைந்தார்.

கKரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மேல முனையனூர் பகுதியில் உள்ள நாயக்கர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி லட்சுமி வயது 60. இவர் ஏப்ரல் 11-ம் தேதி இரவு 7 மணி அளவில் முனையூரில் இருந்து சேங்கல் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, மேல முனையனூர் பகுதியில் செயல்படும் பி கே எஸ் கொசுவலை நிறுவனம் அருகே நடந்து சென்ற போது, கிருஷ்ணராயபுரம் தாலுகா, கோவை குளம், தாராபுரத்தனூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற லட்சுமியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லட்சுமிக்கு இரு கைகளிலும் உள்ள முழங்கைகளிலும், இடுப்பு பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால்,

உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story