நேருக்கு நேர் மோதி விபத்து

நேருக்கு நேர் மோதி விபத்து

கோப்பு படம்

விஸ்வநாதபுரி வாய்க்கால் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
கரூர் திருமாநிலையூர் அருகே உள்ள முதல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோபால் வயது 67. இவர் ஜூன் 22 ஆம் தேதி காலை 6:30- மணி அளவில், கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி வாய்க்கால் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில், விசுவநாதபுரி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த டூ வீலர், கோபால் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முதியவர் கோபாலுக்கு பலத்த காயமேற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கோபால் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதை ஆகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Tags

Next Story