கரூர் அருகே பைக் மோதி விபத்து: முதியவர் படுகாயம்

கரூர் அருகே பைக் மோதி விபத்து: முதியவர் படுகாயம்

காவல் நிலையம்

கரூர் அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேலாயுதம்பாளையம், முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 60. இவர் மே 3-ம் தேதி இரவு 7 மணி அளவில், வேலாயுதம்பாளையத்தில் இருந்து டிஎன்பிஎல் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேலாயுதம்பாளையம் காந்தி மண்டபம் அருகே நடந்து சென்ற போது, அவ்வழியாக வேகமாக வந்த வேலாயுதம்பாளையம், அன்னை நகர், நகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் சரத் வயது 14 என்பவர் ஓட்டி வந்த டி வி எஸ் எக்ஸ் எல் வாகனம், நடந்து சென்ற முருகேசன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகேசனுக்கு தலை, இடது கால் முட்டி, வலது கால் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே போல டூவீலரை ஓட்டி வந்த சரத்துக்கு வலது கால், வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள செந்தில்கேர் மருத்துவமனையில்,

முருகேசனையும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரத்தையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

இது தொடர்பாக டூவீலரை அஜாக்கிரதையாகவும், முறையான அனுமதி பெறாமலும் ஒட்டிய சரத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story