இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்!

இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்!

இருசக்கர வாகன விழிப்புணர்வு 

ஆரணியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி உதவி ஆட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஊர்வலத்தில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story