கரூர் அருகே பைக்-கார் நேருக்கு நேர் மோதல்: முதியவர் பலி

கரூர் அருகே பைக்-கார் நேருக்கு நேர் மோதல்: முதியவர் பலி

விபத்துக்குள்ளான பைக்

கரூர் அருகே பைக்-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் பலியானர்.

டூ வீலர்-கார் நேருக்கு நேர் மோதி, முதியவர் பலியான விபத்தில், டிரைவர் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லீஸ்வரன் வயது 54.

இவருக்கு சொந்தமான டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் வாகனத்தில், ஜனவரி 31 ஆம் தேதி இரவு 7 மணி அளவில், அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி பள்ளி அருகே சென்றபோது, எதிர் திசையில் அரவக்குறிச்சி தாலுக்கா, பள்ளப்பட்டி, காயிதே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்த முஸ்தாக் அலி வயது 40 என்பவர்,

வேகமாக ஓட்டி வந்த ஸ்விப்ட் டிசையர் கார் மோதி மல்லீஸ்வரன் படுகாயம் அடைந்தார். பின்னர், அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லீஸ்வரன் மனைவி தமிழ்ச்செல்வி வயது 36 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய முஸ்தாக்அலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story