நடந்து சென்றவர் மீது பைக் மோதி ஒருவர் பலி

நடந்து சென்றவர் மீது பைக் மோதி ஒருவர் பலி
சொக்கம்பட்டியில் பைக் மோதியதில் ஒருவர் பலி
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி பகுதியில் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி அடுத்துள்ள புன்னைவனம் பகுதியைச் சேர்ந்தவர் தவிடன் (40). இவர் பாம்பு கோயில் சந்தை பகுதியில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தவிடன் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story