கள்ளக்குறிச்சி அருகே பைக் மோதல்: முதியவர் பலி

கள்ளக்குறிச்சி அருகே பைக் மோதல்: முதியவர் பலி

கோப்பு படம் 

கள்ளக்குறிச்சி அருகே பைக் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் பலியானர்.

கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தான் மகன் அய்யாசாமி,65; இவர், நேற்று காலை 7 மணியளவில் விருகாவூர் - கூத்தக்குடி சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பைக், அய்யாசாமி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நடந்து சென்ற அய்யாசாமி மற்றும் பைக்கில் சென்ற எடச்சித்துாரை சேர்ந்த கோவிந்தன் மகன் சண்முகம், கார்த்திகேயன் மகன் சுகபிரியன்,7; மகள் சாதனா,15; ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடன் 4 பேரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதில், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவர் அய்யாசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story